பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:07
மும்பை,: அவுரங்காபாத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், நிர்லப் அப்ளையன்சஸ் நிறுவனம், பல்வேறு வகையான சமையலறை சாதனங்களை தயாரித்து, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும்விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம், வெளிப்புறத்தில் வண்ணப்பூச்சுகளுடன் கூடிய புதிய வகை சமையலறை சாதனங்களை வடிவமைத்து "நியூ ஆஸ்பா' என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த சமையலறை சாதனங்களின் கைப்பிடிகள் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டடுள்ளன. இப்பாத்திரங்களின் அடிப்பகுதி மிகவும் கனமாக உருவாக்கப்பட்டுள்ளதால், இவை, நீண்ட காலம் உழைக்கக் கூடியது. மேலும், இப்பாத்திரங்களுக்கு 12 மாத கால உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.நிர்லப் நிறுவனம், பிரை பான், கடாய் மற்றும் ஆப்ப பாத்திரம் என நான்கு வகையான பாத்திரங்களைஅறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை, 465 முதல் 1,135 ரூபாய் வரையில் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|