பதிவு செய்த நாள்
09 ஜன2012
14:21
புதுiடில்லி: வோல்ஸ்வேகன் நிறுவனம், வரும் 2013ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. உற்பத்தி திறன் அதிகரிப்பு, புதிய மாடல் அறிமுகம், ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என வோல்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியாவுக்கான முதன்மை பிரதிநிதி ஜான் சாக்கோ தெரிவித்துள்ளார். இந்நிறுவனம், 2008ம் ஆண்டில் ரூ.3,600 கோடி முதலீட்டுத் திட்டத்தை அறிவித்திருந்தது. தற்போது மேலும் ரூ.2,000 கோடி முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுமத்தில் இடம் பெற்றுள்ள வோல்ஸ்வேகன், ஆடி மற்றும் ஸ்கோடா ஆகிய கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது மஹாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் மற்றும் சக்கான் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்..
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|