வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வேலையிழப்பு இல்லைவெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வேலையிழப்பு இல்லை ... நடப்பு 2011-12ம் நிதியாண்டில்ஏலக்காய் ஏற்றுமதி புதிய சாதனை அளவை எட்டும் நடப்பு 2011-12ம் நிதியாண்டில்ஏலக்காய் ஏற்றுமதி புதிய சாதனை அளவை எட்டும் ...
எண்ணெய் நிறுவனங்களுக்குரூ.34,000 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2012
00:11

புதுடில்லி: பொதுத் துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, மூன்று மாதங்களில், 34 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், மானிய விலையில் பெட்ரோலியப் பொருட்களை வழங்கி வருகின்றன.கடந்த 2010ம் ஆண்டு, ஜூன் மாதம், பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
ஆனால், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான விலை கட்டுப்பாடு நீடிப்பதால், எண்ணெய் நிறுவனங்கள், அவற்றை அடக்க விலைக்கும் குறைவாகவே விற்பனை செய்து வருகின்றன.இதனால், இந்நிறுவனங்கள் பெருத்த இழப்பை சந்தித்து வருகின்றன. மத்திய அரசு, மானியம் வழங்கும் போதிலும், இந்நிறுவனங்களின் இழப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து வருகிறது.இதன்படி, நடப்பு 2011-12ம் நிதியாண்டின், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், மூன்று நிறுவனங்களும், 34 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. இதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இழப்பு, 19 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதர இரு நிறுவனங்களுக்கும், 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, எண்ணெய் நிறுவனங்கள், டாலரில் செலுத்தி வருகின்றன. ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், இந்நிறுவனங்களின் இழப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.









Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)