அலுமினியம் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்புஅலுமினியம் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு ... நடப்பு 2011-12ம் நிதியாண்டில்அன்னிய நேரடி முதலீடு ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டும் நடப்பு 2011-12ம் நிதியாண்டில்அன்னிய நேரடி முதலீடு ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டும் ...
மறைமுக வரி ரூ.2.85 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
00:14

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 16.1 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 168 கோடி ரூபாயாக இருந்தது. கலால், சுங்கம் மற்றும் சேவை வரி ஆகியவை மறைமுக வரியாகும்.
இந்த வரி வசூல் குறித்து மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் கூறியதாவது;நடப்பு நிதியாண்டிற்கு மறைமுக வரி வசூல் இலக்கு, 3 லட்சத்து 92 ஆயிரத்து 908 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற டிசம்பர் வரையிலான மூன்று காலாண்டுகளில் வசூலிக்கப்பட்ட மறைமுக வரி, பட்ஜெட் மதிப்பீட்டில்,72.7 சதவீதமாகும்.டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டதையடுத்து, சென்ற ஜுன் மாதம், பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்கம் மற்றும் கலால் வரிகளை மத்திய அரசு குறைத்தது. இதனால், 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும், மறைமுக வரி வசூல் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.சென்ற டிசம்பரில் மறைமுக வரி வசூல், 15.9 சதவீதம் உயர்ந்து 34 ஆயிரத்து 819 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 30 ஆயிரத்து 54 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், கலால் வரி வசூல் 9.7 சதவீதம் உயர்ந்து 12 ஆயிரத்து 546 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கலால் வரி வசூல், முறையே 6.5 சதவீதம் மற்றும் 8.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஆனால், அக்டோபரில் இது வளர்ச்சி கண்டிருந்தது.சென்ற டிசம்பரில், சேவை வரி வசூல், 48.6 சதவீதம் வளர்ச்சி கண்டு 9,665 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்தநிலை, உள்நாட்டில் உயர்ந்துள்ள பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பங்குச் சந்தை சரிவால்,பொதுத்துறை நிறுவனப் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடியாத சூழல் போன்றவற்றால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சென்ற டிசம்பரில் மறைமுக வரி வசூல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)