பதிவு செய்த நாள்
11 ஜன2012
09:37
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.08 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.12 புள்ளிகள் அதிகரித்து 16238.21 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 35.40 புள்ளிகள் அதிகரித்து 4884.95 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும், காலையில் பங்கு வியாபாரம் தொடங்கிய போது, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளிலும் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|