தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': புதுச்சேரியில் நாளை துவக்கம்தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': புதுச்சேரியில் நாளை துவக்கம் ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
பயறு விளைச்சலை அதிகரிக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
10:49

சென்னை:பயறு வகை பயிர்களில் அதிக விளைச்சலைப் பெற, "பயறு அதிசயம்' என்ற, ஊட்டப் பொருள் கலவையை தெளிக்கும் திட்டத்திற்காக, 212.50 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பயறு வகைகள், ஆறு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டாலும், மகசூல் இரண்டு லட்சம் டன் என, குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே, நவீன தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் பரப்பி, மகசூலை அதிகரிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
புதிய பயிர் ஊக்கிபயறு வகைகளுக்கு தேவையான இலை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் இரும்பு, போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் ஆக்சின் எனும் பயிர் ஊக்கி ஆகியவை அடங்கிய, "பயறு அதிசயம்' என்ற, பயிர் ஊக்கியை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ளது. பூப்பூக்க துவங்கும் போதும், காய் பிடிக்கும் நேரத்திலும் பயிர்களில் இதை தெளிப்பதால், 10 முதல், 20 சதவீதம் அதிக மகசூல் பெற இயலும். பூ உதிர்தல் பெருமளவு குறைக்கப்பட்டு, உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், மாநிலத்தின் பயறு உற்பத்தித் தேவையில் தன்னிறைவு பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிர் ஊக்கியை, உளுந்து மற்றும் பாசிப் பயிர்களுக்கு, "டி.ஏ.பி.,' கரைசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.50 சதவீத மானியம்முதல் கட்டமாக, 1,695 கிராமங்களில், 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில், "பயறு அதிசயம்' தெளிக்கும் திட்டத்தை செயல்படுத்த, முடிவாகி உள்ளது.இந்த பயிர் ஊக்கியைப் பிரபலப்படுத்தும் விதமாக, விவசாயிகளுக்கு, 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். இதற்காக, 212.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)