பதிவு செய்த நாள்
11 ஜன2012
10:49
சென்னை:பயறு வகை பயிர்களில் அதிக விளைச்சலைப் பெற, "பயறு அதிசயம்' என்ற, ஊட்டப் பொருள் கலவையை தெளிக்கும் திட்டத்திற்காக, 212.50 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பயறு வகைகள், ஆறு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டாலும், மகசூல் இரண்டு லட்சம் டன் என, குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே, நவீன தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் பரப்பி, மகசூலை அதிகரிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
புதிய பயிர் ஊக்கிபயறு வகைகளுக்கு தேவையான இலை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் இரும்பு, போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் ஆக்சின் எனும் பயிர் ஊக்கி ஆகியவை அடங்கிய, "பயறு அதிசயம்' என்ற, பயிர் ஊக்கியை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ளது. பூப்பூக்க துவங்கும் போதும், காய் பிடிக்கும் நேரத்திலும் பயிர்களில் இதை தெளிப்பதால், 10 முதல், 20 சதவீதம் அதிக மகசூல் பெற இயலும். பூ உதிர்தல் பெருமளவு குறைக்கப்பட்டு, உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், மாநிலத்தின் பயறு உற்பத்தித் தேவையில் தன்னிறைவு பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிர் ஊக்கியை, உளுந்து மற்றும் பாசிப் பயிர்களுக்கு, "டி.ஏ.பி.,' கரைசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.50 சதவீத மானியம்முதல் கட்டமாக, 1,695 கிராமங்களில், 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில், "பயறு அதிசயம்' தெளிக்கும் திட்டத்தை செயல்படுத்த, முடிவாகி உள்ளது.இந்த பயிர் ஊக்கியைப் பிரபலப்படுத்தும் விதமாக, விவசாயிகளுக்கு, 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். இதற்காக, 212.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|