பதிவு செய்த நாள்
11 ஜன2012
14:12
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மருந்து நிறுவனங்களின் வருவாய் 20 லிருந்து 25 சதவீத வரை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு ஏறத்தாழ 8.5 சதவீதம் குறைந்ததில் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் மருந்து நிறுவனங்களின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரிக்கும்.ரான் பாக்ஸி, டாக்டர் ரெட்டி லேபரட்டரீஸ் மற்றும் சிப்லா போன்ற நிறுவனங்களின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காலாண்டில், இருதய நோய் சிகிச்சைக்கான பொதுப்பண்பு கொண்ட லிப்பிட்டர் என்னும் மருந்து விற்பனை ரான்பாக்ஸி நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க காரணமாய் இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரம், இந்நிறுவனத்தின் வெளி நாட்டு கடன் மற்றும் அதன் மீதான வட்டி பெரும் சுமையாக கருதப்படுகிறது.
மருந்து துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில், இப்கா மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு 20 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் மற்றும் சன் ஃபார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் 7 லிருந்து 8 சதவீதமும் வளர்ச்சி கண்டிருந்தன. அதே நேரம் லுப்பின், கெடிலா ஹெல்த்கேர் மற்றும் ரான் பாக்ஸி ஆகிய நிறுவன பங்குகள் மதிப்பு முறையே 6 சதவீதம், 11 சதவீதம் மற்றும் 15 சதவீதம் சரிவினை எதிர் கொண்டன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|