சிரெய் இன்ப்ராஸ்ட்ரக்சர்ரூ.300 கோடிக்கு கடன் பத்திரங்கள்சிரெய் இன்ப்ராஸ்ட்ரக்சர்ரூ.300 கோடிக்கு கடன் பத்திரங்கள் ... எச்.டீ.எப்.சி. நிறுவனம்நிகர லாபம் ரூ.981 கோடி எச்.டீ.எப்.சி. நிறுவனம்நிகர லாபம் ரூ.981 கோடி ...
ரப்பர் உற்பத்தி 1 லட்சம் டன்னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2012
00:19

புதுடில்லி:உள்நாட்டில், கடந்த டிசம்பர் மாதத்தில், 1.04 லட்சம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தியாகியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1 சதவீதம் (1.03 லட்சம் டன்) அதிகம்.இருப்பினும், இதே மாதங்களில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 4 சதவீதம் அதிகரித்து, அதாவது, 80 ஆயிரத்து 465 டன்னிலிருந்து, 84 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.
இதே மாதங்களில், இயற்கை ரப்பர் இறக்குமதி, 13 ஆயிரத்து 805 டன்னிலிருந்து, 21 ஆயிரத்து 734 டன்னாக உயர்ந்துள்ளது என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே மாதங்களில், நாட்டின் இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 2,495 டன்னிலிருந்து, 922 டன்னாக குறைந்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், முதல் ஒன்பது மாத காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 4.3 சதவீதம் வளர்ச்யடைந்து, 6.51 லட்சம் டன்னிலிருந்து, 6.79 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 7.08 லட்சம் டன்னிலிருந்து, 7.17 லட்சம் டன்னாக குறைந்தளவில் உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இயற்கை ரப்பர் இறக்குமதி, 20 சதவீதம் சரிவடைந்து, 1.33 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், இதே காலத்தில் ரப்பர் ஏற்றுமதி, மூன்று மடங்கு அதிகரித்து, 22 ஆயிரத்து 472 டன்னாக உயர்ந்துள்ளது என ரப்பர் வாரியத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு விமான நிலையங்களின் எரிபொருள் விற்பனை வரி வசூல் 85 சதவீதம்-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-ல்வேறு மாநிலங்களின் விமான எரிபொருள் விற்பனை வரி வசூலில், ஆறு விமான நிலையங்களின் பங்களிப்பு 85 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விமான எரிபொருள் விற்பனை வரி வாயிலாக, மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இதில், சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா ஆகிய ஆறு விமான நிலையங்களில் எரிபொருள் வசூல் 2,184 கோடி ரூபாயாக உள்ளது. எஞ்சிய 80 விமான நிலையங்களின் பங்களிப்பு 316 கோடி ரூபாய் என்ற அளவில், மிகக் குறைவாக உள்ளது.விமான எரிபொருள் விற்பனை வரி வசூலில், டெல்லி, 744 கோடி ரூபாய் வசூலித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு விமான எரிபொருளுக்கு 20 சதவீதம் விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள மும்பை, 25 சதவீத விற்பனை வரி வாயிலாக 552 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. சென்னை விமான நிலையம் 29 சதவீத விற்பனை வரி முலம் 276 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஐதராபாத் விமான நிலையம் 16 சதவீத வரி விதிப்பு வாயிலாக 252 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள பெங்களூரு விமான நிலையம் எரிபொருளுக்கு 28 சதவீத வரி மூலம், 204 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கோல்கட்டா விமான நிலையம் 25 சதவீத வரி வாயிலாக 156 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
இது குறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முக்கிய விமான நிலையங்களைக் கொண்ட சில மாநிலங்கள் மட்டுமே, விமான எரிபொருள் விற்பனை வரி வாயிலாக, குறிப்பிடத்தக்க அளவிற்கு வருவாய் ஈட்டி வருகின்றன. விமான எரிபொருள் வரியைக் குறைத்தால், குறைந்த வரி வசூலைக் கொண்டுள்ள மாநிலங்களின் விமான போக்குவரத்து சேவை மேம்படும்' என்றார்.உலகிலேயே, வங்கதேசத்தில் தான், விமான எரிபொருளுக்கு மிக அதிகமாக 27 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், சராசரியாக 24 சதவீதம் வரி வசுலிக்கப்படுகிறது. விமான போக்குவரத்து துறையின் செலவினம் உயர்ந்துள்ளதற்கு, விமான எரிபொருள் மீதான அதிக வரி விதிப்பும் ஒரு காரணம் என விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இந்நிறுவனங்களின் மொத்த செலவில், எரிபொருளுக்கான செலவினம், கடந்த ஓராண்டில் 40 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.விமான எரிபொருளுக்கான வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையத்தின் தலைமை செயல் அதிகாரி (இந்திய துணைக் கண்டம் மற்றும் மேற்காசிய பிரிவு) கபில் கவுல் தெரிவித்தார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)