பதிவு செய்த நாள்
14 ஜன2012
00:57
மும்பை:உள்நாட்டில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்ற டிசம்பர் மாதத்தில், 6 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்தாண்டின் நவம்பர் மாதத்தை விட, 10.3 சதவீதம் (6 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய்) குறைவாகும்.பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவடைந்துள்ளது. சென்ற டிசம்பரில், பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, முதலீட்டாளர்கள் 63 ஆயிரத்து 421 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டுள்ளனர்.
டிசம்பர் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள், கில்டு பண்டு, தங்கம் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.அதேசமயம், பேலன்ஸ்டு பண்டு, வருவாய் திட்டம், நிதி சந்தை சார்ந்த திட்டங்கள், வெளி நாட்டு முதலீட்டிற்கான பண்டு ஆப் பண்டு போன்ற பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளனர் என, இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|