பதிவு செய்த நாள்
14 ஜன2012
01:03
புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடையும் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, 24.50 கோடி டன்னை எட்டி சாதனை படைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய வேளாண் துறை செயலர் பி.கே.பாசு கூறியதாவது:தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, நடப்பு வேளாண் சந்தைப்படுத்தும் பருவத்திலும் நாட்டின் தானிய உற்பத்தி சாதனை அளவை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பருவத்தில், தானிய உற்பத்தி 24.16 கோடி டன்னாக இருந்தது.நாட்டின் பல மாநிலங்களில், பருவ மழை பொழிவு நல்ல அளவில் உள்ளது. சாதகமான பருவ நிலை நிலவுவதால், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் நாட்டின் தானிய உற்பத்தி 24.50 கோடி டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொத்த தானிய உற்பத்தியில், நெல் உற்பத்தி 10.20 கோடி டன்னாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கோதுமை உற்பத்தி 8.40 கோடி டன்னாகவும், பருப்பு வகைகள் உற்பத்தி 1.70 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.சில மாநிலங்களில், குறிப்பிட்ட இடங்களில் வறட்சி அல்லது வெள்ள பாதிப்பு இருந்தது. என்றாலும், ஒட்டு மொத்த அளவில் தானிய உற்பத்தி, கடந்த பருவத்தை விட, நடப்பு வேளாண் பருவத்தில் சிறப்பாகவே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில், சாதகமற்ற பருவநிலையினால், இவ்விரு மாநிலங்களிலும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி சற்று குறையும். அதேசமயம், மற்ற மாநிலங்களில், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி சிறப்பாக உள்ளது. எனவே, ஒட்டு மொத்த அளவில் இதன் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு பாசு தெரிவித்தார்.நாட்டின் தானிய உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், பணவீக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|