பதிவு செய்த நாள்
16 ஜன2012
00:02
மும்பை: இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு, சென்ற டிசம்பரில், 146 கோடி டாலராக (7,300 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 415க்கும் அதிகமான முதலீடுகளில், ஓட்டல் மற்றும் மருத்துவமனை திட்டங்களின் பங்களிப்பு அதிகமாகும்.இந்தியன் ஓட்டல்ஸ் நிறுவனம், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த, தாஜ் இண்டர்நேஷனல் ஓட்டல்ஸ் நிறுவனத்தில் (எச்.கே.,), சில்லரை மற்றும் மொத்த விற்பனை, உணவகங்கள் மற்றும் மருத்துவமனை திட்டங்களுக்காக, 9.34 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. மேலும், இந்நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஓட்டல் மேலாண்மை சேவைக்காக, 36 லட்சம் டாலரை முதலீடு செய்துள்ளது.பினானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்த அதன் துணை நிறுவனத்தில், 4.70 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. டாட்டா ஸ்டீல் நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த அதன் துணை நிறுவனமான, டாட்டா ஸ்டீல் ஏசியா ஹோல்டிங் நிறுவனத்தில், 3.50 கோடி டாலரையும், டாட்டா என்.ஒய்.கே ஷிப்பிங் நிறுவனத்தில், 15 லட்சம் டாலரையும் முதலீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|