செயில் நிறுவனம் தீக்கற்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்செயில் நிறுவனம் தீக்கற்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் ... சிக்கனத்தின் மூலம் 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம் சிக்கனத்தின் மூலம் 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தனியார் பங்கு முதலீடு ரூ.50,550 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
00:05

புதுடில்லி,: இந்தியாவில், சென்ற 2011ம் ஆண்டு, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 1,011 கோடி டாலராக (50 ஆயிரத்து 550 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், இந் நிறுவனங்கள் 4,700 கோடி டாலர் அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளன.
சென்ற ஆண்டு, தனியார் பங்கு முதலீடு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களிடையே 1,011 கோடி டாலர் மதிப்பிலான 441 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இது, முந்தைய 2010ம் ஆண்டு 362 (810 கோடி டாலர்) ஆக இருந்தது.தனியார் பங்கு முதலீடு, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. எனினும், காலாண்டு கணக்கில் சென்ற அக்டோபர் - டிசம்பர் மாதங்களில், தனியார் பங்கு முதலீடு 140 கோடி டாலராக (105 ஒப்பந்தங்கள்) குறைந்துள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதி ஆண்டின் இதே காலத்தில் 180 கோடி டாலராக (88 ஒப்பந்தங்கள்) உயர்ந்திருந்தது.
பொருளாதார மந்த நிலையால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக வென்சர்ஸ் இன்டெலிஜன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டில், ஹீரோ குழுமத்தை சேர்ந்த ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில், பெயின் கேப்பிடல் மற்றும் சிங்கப்புரின் ஜி.ஐ.சி நிறுவனங்கள் 3.650 கோடி ரூபாய் முதலீடு மேற்கொண்டன. இதுதான், சென்ற ஆண்டில் மிக அதிக தொகைக்கு மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடாகும். அப்போலோ மேனேஜ்மென்ட் நிறுவனம், வெல்ஸ்பன் குழும நிறுவனங்களில் 47.40 கோடி டாலரும், அபெக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம், ஐகேட் நிறுவனத்தில் 37.50 கோடி டாலரும் முதலீடு செய்துள்ளன.
சென்ற ஆண்டில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள செய்துள்ள முதலீடு 69 சதவீதம் அதிகரித்து 268 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 69 ஒப்பந்தங்களில், 53 ஒப்பந்தங்களின் ஒட்டு மொத்த மதிப்பு மட்டும் 268 கோடி டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2010ம் ஆண்டில், 63 ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட 63 முதலீடுகளில், 55 ஒப்பந்தங்களின் மதிப்பு 158 கோடி டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளில், குடியிருப்பு திட்டங்கள் 57 சதவீதமும், வர்த்தக திட்டங்கள் 19 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன. இவற்றில், காம்பேக்ட் டிஸ்க் இந்தியாவின் பிலிம் சிட்டி திட்டத்தில், ஜெப் மார்கன் கேப்பிடல் நிறுவனம் மேற்கொண்ட 32 கோடி டாலர் முதலீடு தான் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)