பதிவு செய்த நாள்
16 ஜன2012
10:24
சூலூர் : சூலூர் உழவர் சந்தையில், கடந்தாண்டு 12 கோடி ரூபாய்க்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகி உள்ளன. சூலூர் உழவர் சந்தை, கடந்த 2009ல் துவக்கப்பட்டது. காலை நேரத்தில் மட்டும் நடந்த விற்பனை, பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து, மாலை நேரத்திலும் செயல்பட்டு வருகிறது. காங்கயம்பாளையம், காடாம்பாடி, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் காய்கறிகளை, சூலூர் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு, கடந்தாண்டு, காலை நேரத்தில் 13 ஆயிரத்து 154 விவசாயிகள், 53 லட்சத்து 73 ஆயிரம் கிலோ காய் கறிகளை, விற்பனை செய்துள்ளனர். பத்து லட்சம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர். இதன் மதிப்பு, எட்டு கோடி ரூபாய் ஆகும். மாலை நேரத்தில் எட்டு ஆயிரம் விவசாயிகள், 25 லட்சத்து 97 ஆயிரம் கிலோ காய்கறிகளை விற்பனை செய்துள்ளனர். இதன் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் ஆகும். நான்கு லட்சம் நுகர்வோர், பயன்பெற்றுள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|