தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... குடிநீருக்காக ரூ.40 கோடி ஓதுக்கீடு - ஜெ., உத்தரவு குடிநீருக்காக ரூ.40 கோடி ஓதுக்கீடு - ஜெ., உத்தரவு ...
இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலை ரூ.2000 கோடியில் ஐதராபாத்தில் அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
12:34

ஐதராபாத்:இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக் கழகம், 2,000 கோடி ரூபாய் செலவில், ஐதராபாத்தில் அமைக்கப்படவுள்ளது.அரசு-தனியார் பங்களிப்புடன், இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலை கழகம் ஐதராபாத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ளது. யஷ் பிர்லா குரூப்புக்கும், ஆந்திர மாநில அரசுக்கும் இடையே, இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2,000 கோடி ரூபாய் செலவில், ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் இந்த பல்கலை கழகம் அமைக்கப்படவுள்ளது.இதுகுறித்து யஷ் பிர்லா குரூப் தலைவர் யஷ் பிர்லா கூறியதாவது: இந்தியாவில் உள்ள பெற்றோர், தங்கள் மகன் அல்லது மகள், இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்றும், மருத்துவம் படிக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட்டு தொடர்பான கல்வியை கற்பிக்க வைக்கின்றனர்.
இதனால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அவர்களால் சாதிக்க முடிகிறது. நம்மால் சாதிக்க முடியவில்லை. இந்த எண்ணத்தை மாற்றும் வகையிலும், விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்த பல்கலை கழகம் அமைக்கப்படவுள்ளது. அனைத்து விளையாட்டுக்களுக்கான பயிற்சிகளும், ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் அளவுக்கு, இந்த பல்கலைகலையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் படும்.விளையாட்டு பல்கலையை தொடர்ந்து, ஆயூர்வேத மருத்துவ வசதியுடைய கிராமத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும், எங்கள் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.இவ்வாறு யஷ் பிர்லா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)