சேவைகள் துறை பணவீக்கம்விரைவில் அறிமுகமாகிறதுசேவைகள் துறை பணவீக்கம்விரைவில் அறிமுகமாகிறது ... வரும் 2012-13ம் நிதி ஆண்டில்...பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் வரும் 2012-13ம் நிதி ஆண்டில்...பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் ...
"ரெப்போ ரேட்', சி.ஆர்.ஆர்., குறைக்கப்பட வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2012
00:06


புதுடில்லி: "நாட்டின் பொதுப் பணவீக்கம் குறைந்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் மற்றும் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) குறைக்க வேண்டும்' என, அசோசெம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கமும், பொதுப் பணவீக்கமும் குறைந்துள்ளது. குறிப்பாக, சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம் கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 7.47 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பரில், 9.11 சதவீதமாக இருந்தது.பணவீக்கம் அதிகரித்ததையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் முதல் 2011ம் ஆண்டு நவம்பர் வரையிலுமாக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 13 முறை உயர்த்தியது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தொழில் துறை நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற முடியாமல் உள்ளன. இது, தொழில் துறை உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போதைய சூழ்நிலையில், பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, குறைந்த கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும், ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.50 சதவீத அளவிற்கு குறைக்க வேண்டும். அதேபோன்று, வங்கிகள் அவற்றின் மொத்த டெபாசிட்டிலிருந்து, குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க இருப்பு விகிதத்தையும் 1 சதவீதம் குறைக்க வேண்டும்.தற்போது, ரொக்க இருப்பு விகிதம் 6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதை 1 சதவீதம் குறைக்கும் நிலையில், வங்கிகள் வசம் 56 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஆதாரம் கிடைக்கும். கடந்த அக்டோபர் இறுதி வரையிலுமாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட் 56 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. ரெப்போ ரேட் மற்றும் ரொக்க இருப்பு விகிதங்கள் குறைக்கப்படும் நிலையில், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதாக இருக்கும் என அசோசெம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)