வரும் 2012-13ம் நிதி ஆண்டில்...பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும்வரும் 2012-13ம் நிதி ஆண்டில்...பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் ... வணிகவரித் துறையை கணினிமயமாக்க ரூ.230 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு வணிகவரித் துறையை கணினிமயமாக்க ரூ.230 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு ...
சென்ற ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில்...நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1,35,216 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2012
00:08

-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
நடப்பு நிதி ஆண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி,ரூபாய் மதிப்பின் அடிப்படையில் 17.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 35 ஆயிரத்து 216 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 1லட்சத்து 15 ஆயிரத்து 442 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி, டாலர் மதிப்பில் 15.52 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,523 கோடி டாலரில் இருந்து 2,795 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்
மதிப்பீட்டு காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் 1 சதவீதம் உயர்ந்து 75 ஆயிரத்து 192 கோடியில் இருந்து, 75 ஆயிரத்து 971 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும், இதே காலத்தில், அளவின் அடிப்படையிலான ஏற்றுமதி, 406 லட்சம் காரட்டில் இருந்து 375 லட்சம் காரட்டாக குறைந்துள்ளது.
தங்க ஆபரணங்கள், பதக்கங்கள், நாணயங்கள் ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 44.93 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34 ஆயிரத்து 795 கோடியில் இருந்து 50 ஆயிரத்து 427 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, டாலர் மதிப்பில் 41.93 சதவீதம் அதிகரித்து 762 கோடியில் இருந்து 1,081 கோடி டாலராக உயர்ந்துள்ளது.நவரத்தினக் கற்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் 23.51 சதவீதம் வளர்ச்சி கண்டு, 815 கோடியில் இருந்து 1,006 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, டாலர் மதிப்பில் 21.73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17.7 கோடி டாலரில் இருந்து 21.6 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் 38 சதவீதம் உயர்ந்து 1,532 கோடி ரூபாயில் இருந்து 2,115 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, டாலர் மதிப்பில் 34.63 சதவீதம் வளர்ச்சி கண்டு 33 கோடி டாலரில் இருந்து 45 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்புஇதர வகை நறுக்கப்பட்ட, பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் 93.92 சதவீதம் உயர்ந்து 46 கோடியில் இருந்து 90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, டாலர் மதிப்பில் 91 சதவீதம் வளர்ச்சி கண்டு 1கோடி டாலரில் இருந்து 1.94 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கச்சா வைரக் கற்களின் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் 82 சதவீதம் உயர்ந்து 290 கோடியில் இருந்து, 529 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, டாலர் மதிப்பில் 79 சதவீதம் வளர்ச்சி கண்டு, 63 கோடி டாலரில் இருந்து 113 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இதர கற்களின் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் 152 கோடியில் இருந்து, 311 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கச்சா வைரம்
இதே காலத்தில், அளவின் அடிப்படையிலான கச்சா வைரங்கள் ஏற்றுமதி, 5.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 205 லட்சம் காரட்டில் இருந்து, 217 லட்சம் காரட்டாக அதிகரித்துள்ளது.
மேற்கண்ட உத்தேச மதிப்பீட்டிலான புள்ளி விவரத்தை, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில், ஆபரண ஆடைகள், பேஷன் நகைகள் மற்றும் வெளிநாட்டு பயணிகளிடம் விற்பனை செய்யப்பட்ட நவரத்தினங்கள் மற்றும் தங்க நகைகள் இடம் பெறவில்லை.
வைரங்களை நறுக்குவது மற்றும் பட்டை தீட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு, அனுபவம் வாய்ந்த வல்லுனர்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆபரணங்களை வடிவமைப்பது, உருவாக்குவது போன்ற தொழில்களுக்கும் பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளது.இத்துறைகளின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வரும் 2022ம் ஆண்டுக்குள், நாடு தழுவிய அளவில் 50 கோடி வல்லுனர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், தனி அமைப்பை ஏற்படுத்தியுள்ள.பயிற்சி மையம்
இந்திய நவரத்தினம் மற்றும் ஆபரண வல்லுனர் கவுன்சில் என்ற இந்த அமைப்பு, நாடு முழுவதும் பயிற்சி மையங்களை அமைக்க உள்ளது. இந்த பயிற்சி மையங்களில், வைரங்களை நறுக்குவது, பட்டை தீட்டுவது, ஆபரணங்களை வடிவமைப்பது, உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும். இதன் வாயிலாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில் வல்லுனர்களுக்கான பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.­

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)