பதிவு செய்த நாள்
18 ஜன2012
15:45
சான் பிரான்சிஸ்கோ: யாகூ இணையத்தள நிறுவனர்களுள் ஒருவரான ஜெர்ரி யாங் இன்று அந்த நிறுவனத்திலிருந்து விலகினார். ஆரம்பத்தில் நல்ல நிலையில் இருந்த யாகூ கூகுளின் வளர்ச்சியால் பின்னுக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் யஜர்ரி யாங் நிறுவனத்தை கையாளும் முறை குறித்து பங்குதாரர்கள் அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்தனர். இவர் யாகூவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது தான் அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் ரூ. 2.3 லட்சம் கோடி விலை கொடுத்து வாங்க முன் வந்தது. ஆனால், விலை போதவில்லை என்று கூறி விற்க மறுத்துவிட்டார் யாங்.அதே போல சீனாவின் முன்னணி இணையத்தளமான அலிபாபாவில் உள்ள யாகூவின் 40 சதவீத பங்குகளை நல்ல விலைக்கு வாங்க பலர் முன் வந்தபோதும் யாங் விற்க மறுத்துவிட்டார். யாகூவின் லாபத்தை அதிகரிக்க யாங் எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை. இப்போது யாகூவின் நிகர மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந் நிலையில் இரு வாரங்களுக்கு முன் ஸ்காட் தாம்சனை நிறுவன செயல் அதிகாரியாக யாகூ நியமித்தது. இதைத் தொடர்ந்து யாங் அந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்தும், பிற பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.அவர் பதவி விலகிய செய்தி பரவியதும், அமெரிக்க சந்தையில் யாகூவின் பங்கு விலைகள் உடனடியாக 3.4 சதவீதம் வரை உயர்ந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|