பதிவு செய்த நாள்
20 ஜன2012
01:03
புதுடில்லி:நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 1 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர் ), ஜனவரி 15ம் தேதி வரையிலுமாக, 1 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தில், 88 லட்சம் டன்னாக இருந்தது.நாட்டில், சர்க்கரை உற்பத்தியில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாவது இடத்தில், உத்தரப்பிரதேசமும் உள்ளன.
தற்போது, நாட்டில் 516 சர்க்கரை ஆலைகளில், கரும்பு அரவை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. சென்ற பருவத்தில், 498 சர்க்கரை ஆலைகளில் மட்டுமே கரும்பு அரவை மேற்கொள்ளப்பட்டது.மதிப்பீட்டு காலத்தில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின், சர்க்கரை உற்பத்தி, 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. உத்தரப்பிரதேசம் 3.47 கோடி டன் கரும்பு அரவையை மேற்கொண்டுள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 2.70 கோடி டன்னாக இருந்தது. இதே காலத்தில், மகாராஷ்டிராவின் கரும்பு அரவை, 3.10 கோடி டன்னிலிருந்து, 3.50 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.இதன் பிழி திறன், 10.25 சதவீதத்திலிருந்து, 10.71 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|