பதிவு செய்த நாள்
20 ஜன2012
09:15
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.02 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.52 புள்ளிகள் அதிகரித்து 16687.26 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.25 புள்ளிகள் அதிகரித்து 5029.65 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியது முதலே, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. இதுவும் நேற்றைய வர்த்தகத்திற்கு வலு சேர்த்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|