எண்ணூர் துறைமுகத்தின்கடன் பத்திர வெளியீடு தள்ளிவைப்புஎண்ணூர் துறைமுகத்தின்கடன் பத்திர வெளியீடு தள்ளிவைப்பு ... ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 64 கோடி ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 64 கோடி ...
கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம்தூத்துக்குடியில் அனல் மின் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
00:22

சென்னை,கோல் அண்டு ஆயில் குழுமத்தைச் சேர்ந்த கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம், 5,200 கோடி ரூபாய் திட்ட செலவில், தூத்துக்குடியில், 1,200 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைத்து வருகிறது. இத்திட்டம், இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அகமது ஏ.ஆர்.புகாரி கூறியதாவது:தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில், மின் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. நிறுவனம், தூத்துக்குடியில் 1,200 மெகா வாட் திறன் கொண்ட முட்டியாரா அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை, 2006ம் ஆண்டு டிசம்பரில் துவக்கியது. இதற்கு தேவையான பாய்லர், டர்பைன் மற்றும் ஜெனரேட்டர்கள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மின் வினியோகத்திற்காக, பவர் கிரிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவிலிருந்து, ஆண்டுக்கு, 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளது. நிறுவனத்தின், மொத்த மின் உற்பத்தியில், அதிகளவு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்யப்படும். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.டாட்டா நிறுவனத்திற்கு, 500 மெகா வாட் மின்சாரம் வழங்கும் வகையில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள மின்சாரம், மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு அகமது புகாரி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)