கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம்தூத்துக்குடியில் அனல் மின் திட்டம்கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம்தூத்துக்குடியில் அனல் மின் திட்டம் ... நடப்பு 2012ம் ஆண்டில்...இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கை சூடுபிடிக்கும் நடப்பு 2012ம் ஆண்டில்...இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கை சூடுபிடிக்கும் ...
ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 64 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
00:24

புதுடில்லிசென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 64 @காடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
டிசம்பரில், புதிதாக 75 லட்சத்து 50 ஆயிரம் பேர், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையைப் பெற்றுள்ளனர். இது, இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தை விட, 1.19 சதவீதம் (66 லட்சத்து 80 ஆயிரம் வாடிக்கையாளர்கள்) அதிகமாகும். நவம்பர் மாத இறுதியில், நாட்டின் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 63 கோடியே 21 லட்சமாக இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம், 23 லட்சத்து 90 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 10 கோடியே 64 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதே மாதத்தில், தொலைத்தொடர்புத் துறையில் முன்னிலையில் உள்ள, பார்தி ஏர்டெல் நிறுவனம், 9 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 17 கோடியே 57 லட்சமாக உயர்ந்துள்ளது.ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களில், ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, டிசம்பரில், 27.46 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, நவம்பரில், 27.64 சதவீதம் என்றளவில் இருந்தது.
வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், 9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 14 கோடியே 77 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, டிசம்பரில், 23.10 சதவீதமாகக் குறைந்துள்ளது. நவம்பரில், இது, 23.23 சதவீதமாக இருந்தது.
பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் முறையே, 4 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 44 ஆயிரத்து 664 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை முறையே, 9 கோடியே 26 லட்சம் மற்றும் 54 லட்சத்து 40 ஆயிரம் என்றளவில் உள்ளது.
ஏர்செல் நிறுவனம், 6 லட்சத்து 80 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம், அதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 6 கோடியே 16 லட்சமாக உயர்ந்துள்ளது.யூனிநார் நிறுவனம், 21 லட்சத்து 20 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களுக்கு, ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையை வழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை நவம்பரில், 18 லட்சத்து 60 ஆயிரமாக இருந்தது என, இந்த கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)