ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடை ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தென்காசி பகுதியில் மல்லி விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
15:47

குற்றாலம்:தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி அதிக விளைச்சல் காரணமாக போதிய விலையில்லாததால் மல்லி பயிரிட்ட விவசாயிகள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர். தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, வீ.கே.புதூர், கழுநீர்குளம், மேலப்பாவூர் போன்ற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக கருதப்பட்டு ஒருபோகம் நெல் பயிரும், மறுபோகம் தோட்ட கறவை அதாவது கிணற்று பாசனம் மூலம் காய்கனிகள் மற்றும் மல்லி பயிரிடுவது வழக்கம்.கடந்த சில மாதங்களுக்கு முன் கார்பருவத்தின் போது இப்பகுதிகளில் மல்லி பயிரிடப்பட்டு அமோக விளைச்சல் ஏற்பட்டு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஆழ்ந்த மகிழ்ச்சியடைந்து வந்த நிலையில் திடீரென வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மல்லி இலை அழுகும் நிலை ஏற்பட்டது. விலை இருந்தும் உரிய மல்லி இலை இல்லாததால் மல்லி பயிரிட்ட விவசாயிகள் ஆழ்ந்த கவலையடைந்து வந்தனர்.இந்நிலையில் தற்போது மல்லி இலை அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. கடும் பனியிருந்த போதும் மல்லி இலை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இப்பகுதியில் செழித்தோங்கி காணப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் வரை கிலோவிற்கு ரூ.40 வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லி இலை தற்போது கிலோ ரூ.3 வரை விற்கப்பட்டு வருவதால் மல்லி இலை இருந்தும் உரிய விலையில்லையே என மல்லி பயிரிட்ட விவசாயிகள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)