பதிவு செய்த நாள்
22 ஜன2012
02:54
புதுடில்லி : நாட்டின் கனிமங்களின் உற்பத்தி மதிப்பு, சென்ற நவம்பர் மாதத்தில், 15 ஆயிரத்து 692 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்த கனிமங்கள் உற்பத்தியில், கச்சா எண்ணெயின் பங்களிப்பு, 35 சதவீதம் என்றளவில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இதன் உற்பத்தி மதிப்பு, 5,567 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், நிலக்கரி (4,628 கோடி ரூபாய்), இரும்புத் தாது (2,788 கோடி ரூபாய்), இயற்கை எரிவாயு (1,409 கோடி ரூபாய்), பழுப்பு நிலக்கரி (301 கோடி ரூபாய்) மற்றும் சுண்ணாம்புக் கல் (282 கோடி ரூபாய்) ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பும் உயர்ந்துள்ளது.
நாட்டில், உற்பத்தியாகும் மொத்த கனிமங்களின் உற்பத்தி மதிப்பில், மேற்கண்ட ஆறு கனிமங்களின் பங்களிப்பு, 95 சதவீதம் என்றளவில் உள்ளது. சென்ற நவம்பர் மாதத்தில், நிலக்கரி, 4.81 கோடி டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, பழுப்பு நிலக்கரி (29 லட்சம் டன்), இயற்கை எரிவாயு (376 கோடி கன மீட்டர்), கச்சா எண்ணெய் (31 லட்சம் டன்), அலுமினிய தாதுப் பொருட்கள் (10.75 லட்சம் டன்), குரோமைட் (2.83 லட்சம் டன்), தாமிரம் (10 ஆயிரம் டன்), தங்கம் (108 கிலோ), இரும்புத்தாது (1.21 கோடி டன்), சுண்ணாம்புக் கல் (1.99 கோடி டன்), வைரம் (2,047 காரட்) ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|