பதிவு செய்த நாள்
22 ஜன2012
03:10
மும்பை : நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜனவரி 13ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 101 கோடி டாலர் குறைந்து (5,050 கோடி ரூபாய்), 29 ஆயிரத்து 250 கோடி டாலராக (14 லட்சத்து 62 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 315 கோடி டாலர் (15 ஆயிரத்து 750 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29 ஆயிரத்து 350 கோடி டாலராக (14 லட்சத்து 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) குறைந்திருந்தது. கடந்த 15 மாதங்களில், அன்னிய செலாவணி கையிருப்பு, 30 ஆயிரம் கோடி டாலருக்கு கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பும், 47 லட்சம் டாலர் (2,350 கோடி ரூபாய்) சரிவடைந்து, 440 கோடி டாலராக (22,000 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. சர்வதேச நிதியத்தில் நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 28 லட்சம் டாலர் (1,400 கோடி ரூபாய்) குறைந்து, 280 கோடி டாலராக (14 ஆயிரம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.
கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில், எவ்வித மாற்றமும் இல்லாமல், 2,662 கோடி டாலர் என்ற அளவிலேயே (1 லட்சத்து 33 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ உள்ளிட்ட, இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள, அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை அதிகரித்து வருவதால், வரும் வாரங்களில் செலாவணி கையிருப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|