நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,050 கோடி குறைவுநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,050 கோடி குறைவு ... பனிப்பொழிவால் பூ விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ 1,700 ரூபாய் பனிப்பொழிவால் பூ விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ 1,700 ரூபாய் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எட்டு மாதங்களில் தமிழகத்தில் ரூ.1,130 கோடி போர்டு நிறுவனம் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2012
11:13

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த எட்டு மாதங்களில் போர்டு கார் நிறுவனம், 1,130 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது. புதிதாக உற்பத்தி செய்யும் "போர்டு எகோ ஸ்பார்ட்' கார் உற்பத்திக்காக மட்டும், 750 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. போர்டு நிறுவன நிர்வாக இயக்குனர் மைகேல் பொனிஹாம், முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அப்போது, போர்டு நிறுவனம், தமிழகத்தில் செய்ய உள்ள புதிய முதலீடுகள் குறித்து விவரித்தார். போர்டு நிறுவனம் கடந்த அ.தி.மு.க., ஆட்சி நடைபெற்ற, 1995ல் தமிழகத்தில் முதலீடு செய்யத் துவங்கியது. இதன் பின்னரே, ஆடோமொபைல் துறையில் புதிய நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரத் துவங்கின.

கார் இன்ஜின் தயாரிப்பதற்காக, 4,500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது போர்டு நிறுவனம். இதன் மூலம் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஆண்டுக்கு 15 சதவீதம் என்ற நிலையான வளர்ச்சியில் போர்ட் கார் நிறுவனம் தமிழகத்தில் இயங்கி வருகிறது. சென்னை மறைமலைநகரில் உள்ள போர்ட் கார் நிறுவனத்தில் பிகோ, பீலீஸ்டா, என்டோவர் மற்றும் புதிய பீலீஸ்டா கார்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

கூடுதல் முதலீடு: தற்போது, போர்டு எகோ ஸ்பாட் என்ற புதிய ரக காரை போர்டு நிறுவனம் உற்பத்தியை துவக்க திட்டமிட்டு இதற்காக, 750 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக, அந்நிறுவன நிர்வாக இயக்குனர் மைகேல் பொனிஹாம் கூறியுள்ளார். இதன்மூலம், 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்புதிய முதலீட்டைத் தொடந்து, அ.தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்து கடந்த, 8 மாதங்களில் மட்டும் போர்டு நிறுவனம், தமிழகத்தில் 1,130 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.புதிய நிறுவனங்கள் தொழில் துவங்க ஏதுவான சூழ்நிலையை, முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தி உள்ளதாகவும், போர்டு நிர்வாக இயக்குனர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக சேவை மையம்:போர்டு நிறுவனம் சென்னை, கோவை ஆகிய நகரங்களில், பன்னாட்டு வர்த்தக சேவை மையங்களை அமைக்க உள்ளது. இதன்மூலம், 5,000 இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, போர்டு நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)