பதிவு செய்த நாள்
22 ஜன2012
15:07
பனிப்பொழிவால் வரத்து குறைந்து, மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு சேலம், ஆந்திர மாநிலம் கடப்பா, திண்டுக்கல், தேன்கனிக்கோட்டை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வழக்கமாக தினமும் 15லிருந்து 20 டன் வரும். பனிப்பொழிவு அதிகரித்ததால் உற்பத்தி குறைந்து இப்போது தினமும் ஐந்து அல்லது ஆறு டன் பூக்கள் தான் சராசரியாக வருகின்றன.புயலில் பலியான மல்லி கடலூரில் பயிரிடப்படும் காட்டுமல்லி செடிகளை புயல் பெயர்த்து எறிந்து விட்டதால், அங்கிருந்தும் பூ வரத்து அடியோடு நின்றுவிட்டது. தேவை அதிகமாக இருக்கிறது. வரத்து குறைவாக இருப்பதால் பூக்களின் விலை விண்ணை முட்டுகிறது.நுகர்ந்து பார்க்கலாம்ஒரு சேர் அதாவது 300 கிராம் கொண்ட தரமான மல்லி 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ மல்லி, 1,700 ரூபாயை தாண்டிவிட்டதால் சில்லரை வியாபாரிகள் மல்லியை நுகர்ந்து பார்ப்பதற்கே தயங்குகின்றனர். அந்த அளவுக்கு விலை கொடுத்து சில்லரையில் விலை வைக்க முடியாது என்று கூறி நடையை கட்டிவிடுகின்றனர். சில வியாபாரிகள் மட்டும் வாங்கி செல்கின்றனர்.ஜாதி மல்லி ஒரு சேர் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காட்டு மல்லி சேர் 180லிருந்து 200 வரை விற்கப்படுகிறது. பட்டுரோஸ் விலையில் சற்று இறக்கம் காணப்படுகிறது. 100 கிராம் எடையுள்ள கனகாம்பரம் 60 ரூபாய்க்கு விற்றது. சாமந்தி அரை கிலோ கொண்ட ஒரு தட்டு 100 ரூபாயை தொட்டு விட்டது. சாதாரண நாட்களில் இது 10 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகும்.அரளியின் அரசாட்சி
பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளி பாக்கெட் 20 ரூபாயை தாண்டிவிட்டது. சில்லரை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றியமையாத தேவைக்கு மட்டுமே பூக்களை வாங்கி செல்கின்றனர்.
கொள்முதல் விலை உயரவில்லைரூபன் என்ற வியாபாரி கூறுகையில், ""அடக்க விலைக்கு கொடுத்தால் போதும் என்ற நிலையில் வியாபாரம் செய்து வருகிறோம். விலை ஏற்றம் கண்டு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்,'' என்றார். தெருமுனையில் பூ விற்கும் செவ்வந்தி கூறுகையில், ""விலை ஏற்றம் ஒருபுறம் இருந்தாலும் எடையும் சரிவர இருப்பதில்லை. 500 ரூபாய்க்கு மல்லி வாங்கி முழம் 30 ரூபாய்க்கு விற்றால் தான் கட்டுபடியாகும். அந்த விலைக்கு மக்கள் வாங்குவார்களா என, சந்தேகமாக இருக்கிறது,'' என்றார்.பெரியபாளையத்தை சேர்ந்த மல்லிகை விவசாயி நடராஜன் கூறுகையில், ""உரம், இடுபொருள், பூச்சுக்கொல்லி மருந்து, ஆள் கூலி எல்லாம் உயர்ந்து விட்டது. பூக்களின் கொள்முதல் விலை தான் உயரவில்லை. முன்பண பிடித்தம், போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவுகளை கழித்து பார்த்தால், விவசாயம் செய்வதா அல்லது நிலத்தை விற்றுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று எண்ணத் தோன்றுகிறது,'' என்றார்.உள்ளூர் பூ வரத்து குறைவுதிருவள்ளூர் மாவட்டத்தில், பெரும்பாலான கிராமங்களில் மல்லி சாகுபடி நடக்கிறது. பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்து விட்டதால் அத்திமேடு, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வர வேண்டிய பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|