பதிவு செய்த நாள்
22 ஜன2012
16:33
ஈரோடு: பருத்தி காட்டன் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மீண்டும் நூல் விலை அதிகரிக்க துவங்கி உள்ளது. நடப்பு ஆண்டு பருத்தி விளைச்சல் குறைந்ததன் காரணமாக, உள்நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவியது. எனினும், வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதியால், உள்நாட்டில் பருத்தி தேவை அதிகரித்தது. இதன் காரணமாக பருத்தி குவிண்டால், 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாறுமாறாக உயர்ந்தது. அதையடுத்து, மாநிலம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், வணிகர்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பின் மத்திய அரசு தலையிட்டு வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டு, உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்பட பருத்தி இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொண்டது.இதன் காரணமாக, உள்நாட்டில் பருத்தி தேக்கம் அதிகரிப்பால், விலையும் கிடுகிடுவென சரிந்து குவிண்டால் ரூ. 28 ஆயிரமாக குறைந்தது.
தற்போது, பருத்தி உற்பத்தி குறைவு, மின் வெட்டு, ஆள்பற்றாக்குறையால் மீண்டும் நூல் விலை அதிகரிக்க துவங்கியுள்ள வணிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நூல் ஏஜன்ட் சங்கர் கூறுகையில், ""திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் வெப்ட், வார்ப் நூல்களான, 40ம் நம்பர், 30ம் நம்பர், 34ம் நம்பர், 42ம் நம்பர், 10ம் நம்பர் ஆகியவை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, பருத்தி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், விலையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.""கடந்த வாரம் வெப்ட் நூல்கள் பைக்கு, 40ம் நம்பர், 8,300 ரூபாயாக இருந்தது, 900 ரூபாய் அதிகரித்து 9,200 ரூபாய்க்கும், 34ம் நம்பர் 8,000 ரூபாயில் இருந்து, 8,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. வார்ப் நூல், 40ம் நம்பர் 9,100 ரூபாயாக இருந்தது, 10 ஆயிரம் ரூபாயாகவும், 42ம் நம்பர் 9,300ல் இருந்து, 10 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும், உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|