கீர்த்திலால் ஜுவல்லர்ஸ்"ஷிண்டே கலெக்ஷன்ஸ்' அறிமுகம் கீர்த்திலால் ஜுவல்லர்ஸ்"ஷிண்டே கலெக்ஷன்ஸ்' அறிமுகம் ... அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை உயரும் அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை உயரும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சுருள் நோய் தாக்குதலால் குடை மிளகாய் உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
00:08

ஓசூர்: ஓசூர் தாலுகாவில், கடும் குளிர் காற்றால், குடை மிளகாய் செடிகளில் இலை சுருள் நோய் ஏற்பட்டு, தரமற்ற குடை மிளகாய்கள் உற்பத்தியாவதால், ஏற்றுமதி குறைந்துள்ளது. அதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நல்ல மண் வளமும், குளிர்ந்த காலநிலையும் கொண்ட, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவில், அதிகளவு காய்கறிகள் சாகுபடி நடக்கிறது. ஓசூர், பாகலூர், பேரிகை, பேளகொண்டப்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதியில், 2,000 ஏக்கரில் பசுமை குடோன் முறையில் குடை மிளகாய் சாகுபடி நடக்கிறது.பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு கலர்களில் கண்ணை கவரும் வகையில் உற்பத்தியாகும் அதிக காரமில்லாமலும், சுவையாகவும் இருப்பதால், இந்த குடை மிளகாய்கள், பல்வேறு சிற்றுண்டிகள் மற்றும் உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.குறிப்பாக, சாலையோர டீ கடைகளில் பஜ்ஜி போடுவது முதல் நட்சத்திர ஓட்டல்கள், தாபா ஓட்டல்களில் தயாரிக்கப்படும் பிரைட் ரைஸ், பீசா உணவுகள், வெஜிடேபிள் காய்கறி உணவுகள், அசை உணவுகள், கார உணவுகள் தயாரிப்பில் குடை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் இவ்வகை குடை மிளகாய்கள், நியூசிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அரேபிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதியாகிறது. வெளிநாடுகளில் பெரும்பாலும், மக்கள் அதிகளவு பச்சை உணவு வகைகள் சாப்பிடுவதால், ஓசூர் குடை மிளகாய்களுக்கு சர்வதேச சந்தையிலும் நல்ல வரவேற்பு உள்ளது.தற்போது, ஓசூர் பகுதியில், மூன்று மாதமாக வீசும் பனிக்காற்று, மூடுபனியால் குடை மிளகாய் செடிகளில் மர்ம நோய் தாக்கியுள்ளது. அதனால், செடிகள் சுருங்கி தரமில்லாத குடை மிளகாய்கள் உற்பத்தியாகிறது. அதனால், வெளிநாட்டு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.அதனால், பசுமை குடோனில் பல லட்சம் ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்த தரமில்லாத இந்த குடை மிளகாய்களை, விவசாயிகள், உள்ளூர் உழவர் சந்தை, டீ கடைகள், ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:நடப்பாண்டு, எப்போதும் இல்லாத வகையில் பனிக்காற்று, மூடுபனி நீண்ட மாதம் நீடிக்கிறது. பனிக்காற்றால், செடியில் உள்ள இலைகள் சுருண்டு, உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. நோய் தாக்குதலால், மிளகாய்களில் வெள்ளை மற்றும் கறுப்பு கலர் புள்ளிகள் உண்டாகிறது. இதனால், இந்த மிளகாய்களுக்கு சர்வதேச மார்க்கெட்டுகளில் வரவேற்பு குறைந்துள்ளது.தரமில்லாததால், ஏற்றுமதி வியாபாரிகள், அடிமாட்டு விலைக்கு உள்ளூர் வியாபாரிகளுக்கு குடை மிளகாய்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பசுமை குடோன், மருந்து செலவு மற்றும் நீர் பாசனம், கூலி ஆட்கள் சம்பளம் உள்ளிட்ட பராமரிப்பு செலவை கூட எதிர்கொள்ள முடியவில்லை. தமிழக அரசு, தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)