பயிரிடும் பரப்பளவு குறைந்ததால்... நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைய வாய்ப்பு பயிரிடும் பரப்பளவு குறைந்ததால்... நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி ... ... வருமானவரி உச்சவரம்பு உயரலாம் என எதிர்பார்ப்பு வருமானவரி உச்சவரம்பு உயரலாம் என எதிர்பார்ப்பு ...
புதிய விமானங்கள் வாங்கிய செலவு: பி.ஏ.சி. ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
10:06

புதுடில்லி: இந்திய விமான போக்குவரத்திற்காக , ஏர்இந்தியா புதிய விமானங்களை வாங்கியது குறித்து பொதுகணக்கு குழு தனது ஆய்வினை துவக்கியுள்ளது. இதற்காக விமான போக்குவரத்திடம் உரிய ஆவணங்களை தருமாறு கேட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்தினை மேம்படுத்த இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர்இந்தியாவும்- இந்தியன் ஏர்லைன்ஸூம் கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏர்இந்தியா என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டது.மேலும் புதிய விமானங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஏர்இந்தியா, இந்தியன் ஏர்லலைன்ஸ் சார்பில், போயிங் உள்ளிட்ட 113 விமானங்கள் வாங்கப்பட்டன. இந்நிலையில் இரு விமான நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட பின்னர், புதிய விமானங்கள் வாங்கியது தொடர்பான செலவினங்கள் குறித்து ஏற்கனவே மத்திய தணிக்கை கட்டுப்பாட்டு ஜெனரல் அறிக்கையினை (சி.ஏ.ஜி) சமர்பித்துள்ளது. அதன்படி ஆய்வு செய்ய , முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுகணக்கு குழு (பி.ஏ.சி) கடந்த 19-ம் தேதி நடத்திய கமிட்டி கூட்டத்தில், , விமான போக்குவரத்து துறை உயரதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு கேட்டுள்ளது. எனினும் இக்கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே விமானப்‌போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், பி.ஏ.சி.இந்த திடீர் நடவடிக்கை உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)