பதிவு செய்த நாள்
23 ஜன2012
10:06
புதுடில்லி: இந்திய விமான போக்குவரத்திற்காக , ஏர்இந்தியா புதிய விமானங்களை வாங்கியது குறித்து பொதுகணக்கு குழு தனது ஆய்வினை துவக்கியுள்ளது. இதற்காக விமான போக்குவரத்திடம் உரிய ஆவணங்களை தருமாறு கேட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்தினை மேம்படுத்த இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர்இந்தியாவும்- இந்தியன் ஏர்லைன்ஸூம் கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏர்இந்தியா என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டது.மேலும் புதிய விமானங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஏர்இந்தியா, இந்தியன் ஏர்லலைன்ஸ் சார்பில், போயிங் உள்ளிட்ட 113 விமானங்கள் வாங்கப்பட்டன. இந்நிலையில் இரு விமான நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட பின்னர், புதிய விமானங்கள் வாங்கியது தொடர்பான செலவினங்கள் குறித்து ஏற்கனவே மத்திய தணிக்கை கட்டுப்பாட்டு ஜெனரல் அறிக்கையினை (சி.ஏ.ஜி) சமர்பித்துள்ளது. அதன்படி ஆய்வு செய்ய , முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுகணக்கு குழு (பி.ஏ.சி) கடந்த 19-ம் தேதி நடத்திய கமிட்டி கூட்டத்தில், , விமான போக்குவரத்து துறை உயரதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு கேட்டுள்ளது. எனினும் இக்கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே விமானப்போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், பி.ஏ.சி.இந்த திடீர் நடவடிக்கை உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|