பதிவு செய்த நாள்
24 ஜன2012
00:03
மும்பை: லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் (எல் அண்டு டி), டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 992 கோடி ரூபாயை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 22 சதவீதம் (841 கோடி ரூபாய்) அதிகம்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 23 சதவீதம் உயர்ந்து, 11 ஆயிரத்து 492 கோடியிலிருந்து, 14 ஆயிரத்து 155 கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது.ஆண்டின் அடிப்படையில் மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனத்தின் ஆர்டர்களின் மதிப்பு 28 சதவீதம் அதிகரித்து, 17 ஆயிரத்து 129 கோடி ரூபாயாக உள்ளது. சென்ற 2011ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலத்தில், இந்நிறுவனம் வசம் உள்ள மொத்த ஆர்டர்களின் மதிப்பு 1 லட்சத்து 45 ஆயிரத்து 768 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|