பதிவு செய்த நாள்
24 ஜன2012
00:05
மும்பை: பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) நிறுவனம், 72 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு செலவில், அதன் உருக்கு ஆலைகளை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் சி.எஸ்.வர்மா கூறியதாவது:பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில், சிறப்பாக செயல்படுவதில், செயில் நிறுவனம் முன்னோடியாக உள்ளது. தற்போது, நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, ஆண்டுக்கு, 1 கோடியே 40 லட்சம் டன் என்றளவில் உள்ளது. இதை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2 கோடியே 40 லட்சம் டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், நிறுவனம் கூடுதலாக, 1 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்யும். வரும், 2020ம் ஆண்டிற்குள், நிறுவனத்தின் அனைத்து ஆலைகளின் உற்பத்தித் திறனையும், தற்போதைய ஆண்டுக்கு, 4 கோடி டன் என்றளவிலிருந்து, 6 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவற்றிற்காக, 72 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.இதில், மூலப் பொருட்கள் பிரிவிற்கு, 10 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கு, 56 ஆயிரம் கோடி ரூபாயும் செலவிடப்படும். மேற்கண்ட மொத்த திட்ட செலவில், இதுவரை, 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.நிறுவனத்தின், ரூர்கேலா உருக்கு ஆலையை நவீனப்படுத்துவதற்காக, 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இவ்வாலையின் விரிவாக்கத்திற்கு பிறகு, இதன் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு, 20 லட்சம் டன் என்ற அளவிலிருந்து, 42 லட்சம் டன்னாக உயரும்.மேலும், உத்தர பிரதேசத்தில், அமைக்கப்பட்டு வரும் ஜகதீஸ்பூர் ஆலையின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இருப்பினும், இங்கு இனிமேல் தான் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு வர்மா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|