பதிவு செய்த நாள்
24 ஜன2012
00:07
சென்னை,: வங்கித் துறையில், புதுமையான திட்டங்கள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கி வருவதற்காக இந்தியன் வங்கிக்கு 2011ம் ஆண்டிற்கான "தங்க மயில்' விருது வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில், சிறந்த தரம் குறித்த "டபிள்யூ.சி.டி.க்யூ' சர்வதேச மாநாட்டில், இவ்விருதை, ஸ்வீடன் முன்னாள் பிரதமர் ஒலா உல்ஸ்டென், இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் பரோனெஸ் சந்தீப் வர்மா ஆகியோர் வழங்க, இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் பெற்றுக் கொண்டார்.சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினருமான, பி.என்.பகவதி தலைமையிலான ஜி.பி.ஐ.பி.எஸ்.ஏ குழு, இவ்விருதுக்கு இந்தியன் வங்கியை தேர்வு செய்துள்ளது.இந்தியன் வங்கி, குறுங்கடன்களுக்கான பிரத்யேக கிளைகள், சுய உதவிக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்குவதற்கான சிறப்பு மையங்கள் ஆகியவற்றை அமைத்து, சிறப்புற வங்கிச் சேவையை மேற்கொண்டு வருவதற்காக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக் குழுவினரின் பிள்ளைகளுக்கான கல்விக் கடன், வீட்டு வசதிக் கடன் மற்றும் நுகர்வோர் கடன் ஆகியவற்றை செயல்படுத்தி வருவதற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|