பதிவு செய்த நாள்
24 ஜன2012
10:29
மாருதி சுசூகி, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிசான் நிறுவனங்கள் உற்பத்தி செலவு அதிகரித்த காரணத்தினால், கார்களின் விலையை உயர்த்தி உள்ளன.மாருதி 800 முதல் கிசாகி வரை,பல மாடல் கார்களை, மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் மாருதி 800 காரி ன் விலை ரூ.1.97 லட்சம்; கிசாகியின் விலை ரூ.17.5 லட்சம். தற்போது, டிசயர் காரை தவிர மற்ற அனைத்து மாடல் கார்களின் விலையை, மாருதி சுசூகி நிறுவனம், 0.3 சதவீதம் முதல் 3.4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஜனவரி 16ம் தேதி முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சமாக எஸ்எக்ஸ் 4 காரி ன் விலை ரூ.2,400ம், அதிகபட்சமாக டீசல் சுவிப்ட் காரி ன் விலை ரூ.17 ஆயிரம் வரையும் அதிகரி த்துள்ளது. ஆல்டோ காரின் விலையும் ரூ.4,000 வரை உயர்ந்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஏழு மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனமும் 0.5 சதவீதம் முதல் 1.75 சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஸ்பார்க், பீட், குரூஸ், டவோரா கார்களின் விலை ரூ.3,000 முதல் ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நிசான் நிறுவனம் மைக்ரா மற்றும் சன்னி கார்களின் விலையை 0.56 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. மைக்ரா பெட்ரோல் காரி ன் விலை ரூ.3,000 வரையும், மைக்ரா டீசல் காரி ன் விலை ரூ.12 ஆயிரம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட சன்னி பெட்ரோல் காரி ன் விலை ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சன்னி டீசல் காரி ன் விலை உயர்த்தப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|