பதிவு செய்த நாள்
24 ஜன2012
12:41
மும்பை: ரிசர்வ் வங்கியில், வங்கிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய கேஸ் ரிசர்வ் ரேசியோ எனப்படும் வைப்பு தொகை விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கிகள் வைத்திருக்க வேண்டிய வைப்பு நிதியில் 50 பிபிஎஸ் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அது இனிமேல் 5.5 சதவீதமாக இருக்கும் என்றும், இந்த மாற்றம் ஜனவரி 28ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் வங்கிகளின் பண கையிருப்பு 32 ஆயிரம் கோடி கூடுதலாக இருக்கும் என்று அது தெரிவித்திருக்கிறது. மேலும், ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி அதன் இந்த ஆண்டின் நிதிக்கொள்கையை அறிவிக்கும் முன்பே இந்த மாற்றத்தை செய்திருக்கிறது. ஏனெனில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதன் காரணமாக முன்பே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|