பதிவு செய்த நாள்
24 ஜன2012
16:14
மகிந்திரா நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர், 29ம் தேதி, விளையாட்டு பயன்பாட்டு பிரிவில், எக்ஸ்யுவி 500 என்ற காரை அறிமுகப்படுத்தியது. இதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு காணப்பட்டது. அறிமுகப்படுத்திய 10 நாட்களிலேயே, 8,000 பேர் முன்பதிவு செய்தனர். மகா ராஷ்டிராவில், சாகன் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் தான் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. மாதத்துக்கு 2,750 கார்கள் என்ற அளவில் தான் இங்கு உற்பத்தி திறன் உள்ளது.
ஆனால், ஏராளமான பேர் முன்பதிவு செய்ததால், அதற்கு ஏற்றவாறு உற்பத்தி செய்ய முடியுமா என்ற பிரச்னை எழுந்தது. எனவே, எக்ஸ்யுவி 500 காருக்கான முன்பதிவை, மகிந்திரா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கிடையில், அறிமுகப்படுத்திய போது ரூ.10.80 லட்சத்தில் இருந்து ரூ.11.95 லட்சம் வரை விலை அறிவிக்கப்பட்ட எக்ஸ்யுவி 500 காரி ன் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வகைகளுக்கு ஏற்றவாறு, ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.55 ஆயி ரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், எக்ஸ்யுவி 500 காருக்கான முன்பதிவு மீண்டும், நாளை முதல்(ஜன. 25) துவங்கும் என்று, மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த முன்பதிவு 10 நாட்களுக்கு மட்டும் தான். 7,200 கார்களுக்கு மேல், முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், குலுக்கல் முறையில், வாடிக்கையாளர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என மகிந்திரா அறிவித்துள்ளது. இந்த குலுக்கல் முறையில் பங்கேற்க, ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டும். துவக்கத்தில் டில்லி உள்பட ஐந்து நகரங்களில் தான், எக்ஸ்யுவி கார் விற்பனை செய்யப்பட்டது. தற்போது சென்னை, ஐதராபாத், கோல்கட்டா, ஆமதாபாத், லுதியானா, ஜலந்தர், பாட்டியாலா,
சண்டிகர், கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், கோவை, நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 19 நகரங்களில், எக்ஸ்யுவி500 காருக்கு முன்பதிவுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|