ஏற்காட்டில் ரூ.7.75 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்காஏற்காட்டில் ரூ.7.75 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா ... நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி) 7 சதவீதமாக இருக்கும் நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி) 7 சதவீதமாக ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எக்ஸ்யுவி 500 மாடல் காருக்கு நாளை மீண்டும் முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2012
16:14

மகிந்திரா நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர், 29ம் தேதி, விளையாட்டு பயன்பாட்டு பிரிவில், எக்ஸ்யுவி 500 என்ற காரை அறிமுகப்படுத்தியது. இதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு காணப்பட்டது. அறிமுகப்படுத்திய 10 நாட்களிலேயே, 8,000 பேர் முன்பதிவு செய்தனர். மகா ராஷ்டிராவில், சாகன் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் தான் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. மாதத்துக்கு 2,750 கார்கள் என்ற அளவில் தான் இங்கு உற்பத்தி திறன் உள்ளது.
ஆனால், ஏராளமான பேர் முன்பதிவு செய்ததால், அதற்கு ஏற்றவாறு உற்பத்தி செய்ய முடியுமா என்ற பிரச்னை எழுந்தது. எனவே, எக்ஸ்யுவி 500 காருக்கான முன்பதிவை, மகிந்திரா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கிடையில், அறிமுகப்படுத்திய போது ரூ.10.80 லட்சத்தில் இருந்து ரூ.11.95 லட்சம் வரை விலை அறிவிக்கப்பட்ட எக்ஸ்யுவி 500 காரி ன் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வகைகளுக்கு ஏற்றவாறு, ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.55 ஆயி ரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், எக்ஸ்யுவி 500 காருக்கான முன்பதிவு மீண்டும், நாளை முதல்(ஜன. 25) துவங்கும் என்று, மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த முன்பதிவு 10 நாட்களுக்கு மட்டும் தான். 7,200 கார்களுக்கு மேல், முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், குலுக்கல் முறையில், வாடிக்கையாளர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என மகிந்திரா அறிவித்துள்ளது. இந்த குலுக்கல் முறையில் பங்கேற்க, ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டும். துவக்கத்தில் டில்லி உள்பட ஐந்து நகரங்களில் தான், எக்ஸ்யுவி கார் விற்பனை செய்யப்பட்டது. தற்போது சென்னை, ஐதராபாத், கோல்கட்டா, ஆமதாபாத், லுதியானா, ஜலந்தர், பாட்டியாலா,
சண்டிகர், கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், கோவை, நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 19 நகரங்களில், எக்ஸ்யுவி500 காருக்கு முன்பதிவுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)