ஏற்காட்டில் ரூ.7.75 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்காஏற்காட்டில் ரூ.7.75 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா ... டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை டாட்டா ஸ்கை புதிய திட்டம்      டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை டாட்டா ஸ்கை புதிய திட்டம் ...
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி) 7 சதவீதமாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
00:03

மும்பை: நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி) 7 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி மறு மதிப்பீடு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு 2011-12 மற்றும் 2012-13ம் நிதியாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேளாண் துறை, தொழில் துறை, சேவைத் துறை, பொது பணவீக்கம், ரூபாயின் வெளிமதிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி குறித்த மறு மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
அது குறித்த விவரங்கள் வருமாறு:
கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. ஆனால், சர்வதேச பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ரிசர்வ் வங்கியின் முந்தைய மதிப்பீட்டை விட, பல துறைகளின் உற்பத்தி வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. இது, தற்போது, 7 சதவீதமாக இருக்குமென மறுமதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2012-13ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்குமென மறுமதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்துறை
கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது, 3.4 சதவீதமாக இருக்குமென மறுமதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டை விட (3.2 சதவீதம்) அதிகம்.
அதேசமயம், வரும் 2012-13ம் நிதியாண்டில், இத்துறையின் வளர்ச்சி 3 சதவீதம் என்ற அளவில் இருக்குமென மறுமதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 7.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. ஆனால், 2011-12ம் நிதியாண்டில், முதல் மதிப்பீட்டில், 6.4 சதவீதமாக இருக்குமென்றும், மறுமதிப்பீட்டில், 4.1 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வரும் 2012-13ம் நிதியாண்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.
சேவைகள் துறையின் உற்பத்தி வளர்ச்சி,
2010-11ம் நிதியாண்டில், 9.2 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில் 9 சதவீதம் என்ற அளவிலும், 2012-13ம் நிதியாண்டில், 8.8 சதவீதமாக இருக்கும் என மறுமதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பணவீக்கம்
மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம், 9.6 சதவீதமாக இருந்தது. இது, வரும் 2011-12ம் நிதியாண்டில் , 8.8 சதவீதம் என்ற அளவிலும், 2012-13ம் நிதியாண்டில், 6.5 சதவீதமாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, கடந்த 2010-11ம் நிதியாண்டில், சராசரியாக, 44.60 ரூபாய் என்ற அளவில் இருந்தது. சர்வதேச பொருளாதார சுணக்க நிலை உள்ளிட்ட பல காரணங்களால், சென்ற டிசம்பர் மாத இறுதியில், ரூபாய்க்கு எதிரான டாலரின் வெளிமதிப்பு 54 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சராசரியாக 52 ரூபாய் என்ற அளவிலும், 2012-13ம் நிதியாண்டில் 48 ரூபாய் என்ற அளவில் இருக்குமென ரிசர்வ் வங்கி மறுமதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 37.3 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 17.5 சதவீதம் என்ற அளவிலும், வரும் நிதியாண்டில், இது, 14.3 சதவீதம் என்ற அளவில் இருக்குமென மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி
கடந்த 2010-11ம் நிதியாண்டில், இறக்குமதி 26.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 20.6 சதவீதம் மற்றும் 2012-13ம் நிதியாண்டில், 14.4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி அதன் மறுமதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)