பதிவு செய்த நாள்
25 ஜன2012
00:04
சென்னை: வரும், 2014ம் ஆண்டிற்குள், தொலைக்காட்சி ஒளிபரப்புகளை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வழங்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் டாட்டா ஸ்கை நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (ஊடகத் தொடர்பு) பிராங்கோ வில்லியம் கூறியதாவது:
நிறுவனம், டீ.டி.எச். தொலைக்காட்சி சேவையில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவில், 9.40 கோடி குடும்பத்தினர் கேபிள் இணைப்பு வாயிலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். இதில், 8.80 கோடி இணைப்புகள் அனலாக் தொழில்நுட்பத்திலும், மீதமுள்ள இணைப்புகள், டீ.டி.எச். தொழில்நுட்பத்திலும் <உள்ளன.
தற்போது, டீ.டி.எச்., தொழில்நுட்பத்திலான தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை சிறப்பான அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், 4.10 கோடி குடும்பங்கள் டீ.டி.எச். சேவையை பெற்றுள்ளன. ஆண்டுதோறும், 1.20 கோடி குடும்பங்கள் என்றளவில் இந்த சேவை விரிவடைந்து வருகிறது.
மத்திய அரசு, வரும் 2014ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் அனைத்து தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளையும் டிஜிட்டல் முறையில் வழங்க உத்தேசித்துள்ளது. இதில், முதல் கட்டமாக டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா ஆகிய நான்கு நகரங்களில், வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் முறையின் கீழ் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டது. இதற்காக, டாட்டா ஸ்கை நிறுவனம், குறைந்த விலையில் செட் டாப் பாக்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு பிராங்கோ வில்லியம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|