ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ரூ.10,440 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குகிறதுரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ரூ.10,440 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குகிறது ... ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.15,000 கோடி ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.15,000 கோடி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
மஞ்சள் ஏல புறக்கணிப்பால் ரூ.4 கோடி வர்த்தகம் முடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
00:06

ஈரோடு: ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலையாக, குறைந்தபட்ச மஞ்சள் விலையாக, 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என ஈரோடு மஞ்சள் மார்க்கெட்களில் ஏலம் புறக்கணிப்பு போராட்டத்தை விவசாயிகள் நேற்று துவக்கினர். இதனால், நேற்று ஒரே நாளில், 4 கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் முடங்கியது.
ஈரோடு மஞ்சள் மார்க்கெட்களில், 2010ல் மஞ்சள் விலை உயர்வைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த விவசாயிகளும் மஞ்சள் சாகுபடியில் களம் இறங்கினர். 2011 மற்றும், 2012ல் மஞ்சள் சாகுபடி பரப்பு இரு மடங்காக உயர்ந்தது. விலையும் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.தற்போது, புது மஞ்சள் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். மஞ்சள் விவசாயிகளின் நலன் கருதி, அரசு குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தவிர, தேங்கியுள்ள மஞ்சளை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு நாள் மஞ்சள் விற்பனை நிறுத்த போராட்டத்தை, இந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வெளிச் சந்தை, ஈரோடு சொசைட்டி மற்றும் கோபி சொசைட்டி ஆகியவை வழக்கம் போல் நேற்று துவங்கின. எனினும், போராட்டம் காரணமாக வெளியூர், உள்ளூர் விவசாயிகள் மஞ்சளை விற்பனை செய்ய முன்வராததால், வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், குடோன்களிலேயே மூட்டைகள் குவிந்து கிடந்தன. வர்த்தகம் நடக்காததால் நேற்று, ஒரே நாளில் நான்கு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கியது.அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கண்காணிப்பாளர் மணி கூறியதாவது:ஈரோட்டில் உள்ள நான்கு மஞ்சள் மார்க்கெட்களிலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக, நான்கு கோடி ரூபாய் வரை மஞ்சள் வர்த்தகம் நடக்கிறது. நேற்று அனைத்து மஞ்சள் சந்தைகளும் வழக்கம் போல் இயங்கின. ஆனால், மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக் கோரி இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) மஞ்சள் விற்பனை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இதனால், வெளியூர் விவசாயிகள் யாரும் சந்தைகளுக்கு மஞ்சளை எடுத்து வரவில்லை. மஞ்சள் வணிகர்களும் வரவில்லை. ஒரே நாளில் நான்கு கோடி ரூபாய் வரை வர்த்தகம் முடங்கியது. இவ்வாறு மணி கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)