பதிவு செய்த நாள்
25 ஜன2012
00:06
ஈரோடு: ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலையாக, குறைந்தபட்ச மஞ்சள் விலையாக, 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என ஈரோடு மஞ்சள் மார்க்கெட்களில் ஏலம் புறக்கணிப்பு போராட்டத்தை விவசாயிகள் நேற்று துவக்கினர். இதனால், நேற்று ஒரே நாளில், 4 கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் முடங்கியது.
ஈரோடு மஞ்சள் மார்க்கெட்களில், 2010ல் மஞ்சள் விலை உயர்வைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த விவசாயிகளும் மஞ்சள் சாகுபடியில் களம் இறங்கினர். 2011 மற்றும், 2012ல் மஞ்சள் சாகுபடி பரப்பு இரு மடங்காக உயர்ந்தது. விலையும் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.தற்போது, புது மஞ்சள் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். மஞ்சள் விவசாயிகளின் நலன் கருதி, அரசு குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தவிர, தேங்கியுள்ள மஞ்சளை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு நாள் மஞ்சள் விற்பனை நிறுத்த போராட்டத்தை, இந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வெளிச் சந்தை, ஈரோடு சொசைட்டி மற்றும் கோபி சொசைட்டி ஆகியவை வழக்கம் போல் நேற்று துவங்கின. எனினும், போராட்டம் காரணமாக வெளியூர், உள்ளூர் விவசாயிகள் மஞ்சளை விற்பனை செய்ய முன்வராததால், வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், குடோன்களிலேயே மூட்டைகள் குவிந்து கிடந்தன. வர்த்தகம் நடக்காததால் நேற்று, ஒரே நாளில் நான்கு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கியது.அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கண்காணிப்பாளர் மணி கூறியதாவது:ஈரோட்டில் உள்ள நான்கு மஞ்சள் மார்க்கெட்களிலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக, நான்கு கோடி ரூபாய் வரை மஞ்சள் வர்த்தகம் நடக்கிறது. நேற்று அனைத்து மஞ்சள் சந்தைகளும் வழக்கம் போல் இயங்கின. ஆனால், மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக் கோரி இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) மஞ்சள் விற்பனை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இதனால், வெளியூர் விவசாயிகள் யாரும் சந்தைகளுக்கு மஞ்சளை எடுத்து வரவில்லை. மஞ்சள் வணிகர்களும் வரவில்லை. ஒரே நாளில் நான்கு கோடி ரூபாய் வரை வர்த்தகம் முடங்கியது. இவ்வாறு மணி கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|