பதிவு செய்த நாள்
25 ஜன2012
00:07
புதுடில்லி: சென்ற டிசம்பர் மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 300 கோடி டாலராக (15 ஆயிரம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 15 சதவீதம் (350 கோடி டாலர் - 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) குறைவு என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கு, முக்கிய சந்தையாக ஹாங்காங், ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், புதிய சந்தையான லத்தீன், அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு, இவை அதிகளவில் ஏற்றுமதியாகியுள்ளன.நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 3,210 கோடி டாலராக (1 லட்சத்து 60 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 11.65 சதவீதம் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|