ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்புரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு ... ... மின் கட்டண உயர்வு: 27ம் தேதி அறிவுரைக்குழு ஆலோசனை மின் கட்டண உயர்வு: 27ம் தேதி அறிவுரைக்குழு ஆலோசனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 244 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
00:08

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி அதன் ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது.
இந்நிலையில், அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக
49 ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும் வர்த்தகம் முடியும்போது 50.07 ரூபாயில் நிலை கொண்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 244.04 புள்ளிகள் அதிகரித்து, 16,995.77 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,050.32 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,770.01 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை <அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.அதேசமயம், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 81.10 புள்ளிகள் உயர்ந்து, 5,127.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,141.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,049.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)