பதிவு செய்த நாள்
25 ஜன2012
09:39
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.12 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.08 புள்ளிகள் அதிகரித்து 17.688.85 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 24.15 புள்ளிகள் அதிகரித்து 5151.50 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி அதன் ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|