பதிவு செய்த நாள்
25 ஜன2012
10:00
தமிழக மின் கட்டண உயர்வு கோரிக்கை குறித்து, வரும் 27ம் தேதி, மின்கட்டண அறிவுரைக் குழுவினருடன், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறது. இதையடுத்து, பொதுமக்களிடம், கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்கிறது.மின் கட்டண உயர்வு குறித்து, பொதுமக்களின் கருத்துக்களை நேரில் பெறும் வகையில், வரும் 30ம் தேதி முதல், சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சியில், கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட, மின்துறை அறிவுரைக் குழு கூட்டம், வரும் 27ம் தேதி, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நடக்கிறது.இதில், அறிவுரைக் குழு உறுப்பினர்கள், 30 பேர் பங்கேற்கின்றனர். தமிழக எரிசக்தித்துறை செயலர், மின்வாரிய சேர்மன், தமிழக நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர், தொழிற்துறை செயலர், நுகர்வோர் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.இதில், மின் கட்டண உயர்வு மூலம், பொதுமக்கள், தொழிற்துறை, தொழிலதிபர்கள் மற்றும் அரசுத் துறைகளில் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்த கருத்துகள், ஒழுங்குமுறை ஆணையத்தால் பெறப்படும்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|