பதிவு செய்த நாள்
26 ஜன2012
01:54
மும்பை:தங்கத்திற்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், அதன் இறக்குமதி 6,500 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், தங்கம் இறக்குமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட64 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நடப்பு முழு நிதியாண்டில், தங்கம் இறக்குமதி, சாதனை அளவாக 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் (6,500 கோடி டாலர்) என்ற அளவை எட்டும்.
சென்ற 2010-11ம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி 2 லட்சம் கோடி ரூபாயாக (4,000 கோடி டாலர்) இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சராசரி விலை, 31 சதவீதம் உயர்ந்து 1,607 டாலராக (80 ஆயிரத்து 350 ரூபாய்) இருந்தது. இது, அளவின் அடிப்படையில், 25 சதவீதம் உயர்ந்து 554 டன்னாக அதிகரித்துள் ளது. அண்மையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை 2 சதவீதம் என்ற அளவில் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்நிலையிலும் இந்தியா, தங்கம் இறக்குமதியில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்தால் வர்த்தகப் பற்றாக்குறை உயரும் என்ற மதிப்பீடும் உள்ளது. நடப்பு நிதியாண்டில்,நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 5,500 கோடி டாலராக இருக்கும் என முன்பு மதிப்பிடப் பட்டிருந்தது.ஆனால், சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தகப் பற்றாக்குறை மதிப்பீடு 6,500 கோடி டாலராக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|