பதிவு செய்த நாள்
27 ஜன2012
02:08
ஐதராபாத்:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலுமாக, முதல் ஆண்டு பிரிமிய வருவாயாக, 71 ஆயிரத்து 952 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்டதை விட, 17 சதவீதம் (86 ஆயிரத்து 697 கோடி ரூபாய்) குறைவாகும். முதல் ஆண்டு பிரிமிய வருவாய் குறைந்ததில், தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 20 சதவீதமாகவும், பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்களிப்பு 15 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்கள், முதல் ஆண்டு பிரிமிய வருவாயாக, 42 ஆயிரத்து 23 கோடி ரூபாயை வசூலித்துள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 24 சதவீதம் (33 ஆயிரத்து 889 கோடி ரூபாய்) அதிகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|