பதிவு செய்த நாள்
27 ஜன2012
02:20
நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நேரடி வரி வசூல் இலக்கில், 20 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது. அதே சமயம், மறைமுக வரி வசூல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் மூலம், 5 லட்சத்து 32 ஆயிரத்து 651 கோடி ரூபாயும், மறைமுக வரி வசூல் மூலம், 3 லட்சத்து 13 ஆயிரத்து 471 கோடி ரூபாயும் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மறைமுக வரி:இந்நிலையில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நேரடி வரி வசூல் மூலம், 3 லட்சத்து 23 ஆயிரத்து 955 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக, பட்ஜெட் மதிப்பீட்டின் படி, மொத்த நேரடி வரி வசூலில், 61 சதவீதமே எட்டப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மறைமுக வரி வசூல், 42.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2 லட்சத்து 37 ஆயிரத்து 192 கோடி ரூபாயாக உள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டின் படி, மொத்த மறைமுக வரிவசூ லில், 75.7 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. முழு நிதியாண்டில், இலக்கு அளவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறை:சர்வதேச நிலவரங்களாலும், உள் நாட்டில் பணவீக்கம், வட்டி உயர்வு போன்றவற்றாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்புநிதி யாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரடி வரி வசூல் இலக்கில், 15- 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பற்றாக்குறை ஏற் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நேரடி வரி வசூலை அதிகரிக்கும் நோக்கில், வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்வோர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரு மான வரி செலுத்தாமல், பான் கார்டு எண்ணை தெரிவிக்காமல் மிக அதிக தொகைக்கு பரிவர்த்தனை மேற் கொள் வோ ரின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
பொதுத் துறை நிறுவனங்கள்:மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில்,பொதுத் துறை நிறுவனங்கள் வாயிலாக, 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய் டிவிடெண்டு பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 26 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆக, கடந்த நிதியாண்டை விட, 2,500 கோடி ரூபாய் குறைவாக நடப்பு நிதியாண்டின் டிவிடெண்டிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிறப்பாக செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்கள், கூடுதலாக டிவிடெண்டு வழங்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கூடுதலாக, 7,000 கோடி ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.ஆக, நடப்பு நிதியாண்டில், மத்திய அரசுக்கு, பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலான டிவி டெண்டு வருவாய், 30 ஆயிரம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் டிவிடெண்டுக்கு வினியோக வரியாக, 1,500 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டிவிடெண்டு :பொதுத் துறை நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில், குறைந்தபட்சம், 20 சதவீதத்தை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு வழங்குகின்றன. குறிப்பாக எண்ணெய், பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் அடிப்படை கட்டமைப்புத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், 30 சதவீதம் கூட டிவிடெண்டு வழங்குகின்றன. சென்ற நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 56 பொதுத் துறை நிறுவனங்கள் வாயிலாக, 25 ஆயிரத்து 978 கோடி ரூபாய் டிவிடெண்டு கிடைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீட்டின் படி, மத்திய அரசுக்கு,பொதுத் துறை நிறுவனங்கள் மூலம், 23 ஆயிரத்து 494 கோடி ரூபாய், ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாயிலாக 19 ஆயிரத்து 129 கோடி ரூபாய் என மொத்தம், 42 ஆயிரத்து 623 கோடி ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும் என மதிப்பிடப்பட் டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 48 ஆயிரத்து 727 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|