பதிவு செய்த நாள்
27 ஜன2012
12:12
மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்க, மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. வரும் 2013 மே மாதம் வரை, 1,450 மெகாவாட்டும், பின், நான்காண்டுகளுக்கு, 450 மெகாவாட்டும், தனியாரிடம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஏற்படும், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளது. இதன்படி, வரும் ஜூன் முதல், 2013 மே வரை, மின் பற்றாக்குறையை சமாளிக்க, தனியாரிடம் 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இப்போதிருந்து ஐந்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக, 450 மெகாவாட் தனியாரிடம் வாங்க, மற்றொரு டெண்டரையும் மின்துறை அறிவித்துள்ளது. "இன்னும் ஒரு வாரத்திற்குள், இரண்டு டெண்டர் நடவடிக்கைகளையும் முடித்து, கொள்முதல் ஒப்பந்தம் முடிவாகும்' என, மின்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|