மகிந்திரா சத்யம் - டெக் மகிந்திராஇவ்வாண்டு இறுதிக்குள் இணைக்கப்படும்மகிந்திரா சத்யம் - டெக் மகிந்திராஇவ்வாண்டு இறுதிக்குள் இணைக்கப்படும் ... அலுமினிய ஏணிகளுக்கு கிராக்கி அலுமினிய ஏணிகளுக்கு கிராக்கி ...
சிமென்ட் விலை ரூ.50 வரை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
01:26

ஈரோடு:கட்டுமானப் பணிகள் அதிகரித்துள்ளதால், சிமென்ட் பயன்பாடு அதிகரித்து, ஒரே மாதத்தில் மூட்டைக்கு, 50 ரூபாய் வரை, விலை உயர்ந்துள்ளது.கடந்த, 2010-2011ல் சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்தி திறனில், 78 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, அரசு கட்டுமானத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.
இதன் காரணமாக, சிமென்ட் பயன்பாடு குறைந்து, நிறுவனங்கள், அவற்றின் மொத்த சிமென்ட் உற்பத்தியை குறைத்துக் கொண்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அரசின் கட்டுமானத் திட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இதன் காரணமாக சிமென்ட் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் சிமென்ட் இருப்பு அதிகம் இருந்ததால், நிறுவனங்கள், நடப்பாண்டில் உற்பத்தியை குறைக்கவுள்ளன.
ஈரோட்டை சேர்ந்த சிமென்ட் ஏஜன்ட் ராஜ்குமார் கூறியதாவது:தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி, அரியலூர், சங்ககிரி பகுதியில் சிமென்ட் உற்பத்தி அதிகளவு நடக்கிறது. இங்கிருந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஏஜன்ட்களுக்கு சிமென்ட் அனுப்பப்படுகிறது. சிமென்ட் மொத்த உற்பத்தி திறனில், தென்னிந்திய நிறுவனங்கள் - 65 சதவீதம், வட இந்திய நிறுவனங்கள் - 80 சதவீதம் என, மொத்த உற்பத்தி திறனில் - 70 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்தன.
சென்றாண்டில், நிறுவனங்கள் கூடுதலாக உற்பத்தி செய்து, நிலுவையில் உள்ள சிமென்டை, நடப்பாண்டு சந்தைக்கு விடும் முடிவில் உள்ளன. இதனால், சிமென்ட் உற்பத்தி தற்போது குறைந்துள்ளது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அரசின் கட்டுமானப் பணிகள் தற்போது ஜரூராக நடந்து வருகிறது. சிமென்ட் பயன்பாடும் அதிகரிக்க துவங்கி உள்ளதால், விலையும் மூட்டைக்கு, 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் இறுதியில் தரத்தின் அடிப்படையில், 230 முதல், 260 ரூபாய் வரை விலை இருந்தது. தற்போது, மூட்டைக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 280 முதல், 310 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)