சிமென்ட் விலை ரூ.50 வரை உயர்வுசிமென்ட் விலை ரூ.50 வரை உயர்வு ... வரி சேமிப்பிற்கான இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள் வரி சேமிப்பிற்கான இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள் ...
அலுமினிய ஏணிகளுக்கு கிராக்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
01:28

சேலம்:தற்போது சந்தைக்கு அதிகம் வரத் தொடங்கியுள்ள புது வகை ஏணிகள், பாதுகாப்பு அளிப்பதோடு, பெண்களும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
மரக்கட்டையிலான ஏணிகளை, பொதுவாக எல்லோரும் பயன்படுத்தி வந்தனர். அதில் ஒரு கட்டை உடைந்தால் கூட, அதை கயிற்றால் கட்டி, மீண்டும் பயன்படுத்தி வந்தனர். சிலர், ஏணியின் படிக்கட்டு உடைந்து கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர்.அதை தவிர்க்க, தற்போது, பல்வேறு நிறுவனங்கள், இரும்பு மற்றும் அலுமினியத்திலான ஏணிகளை தயாரித்து வருகின்றன. குறிப்பாக, அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஏணிகளில், எந்தவித ஆபத்துமின்றி, யார் வேண்டுமானாலும் ஏற முடியும். பெண்கள், யாருடைய உதவியும் இல்லாமல் இந்த ஏணிகளில் ஏற முடியும்.
சேலம், கோட்டையில் உள்ள நியூ நேஷனல் அலுமினியம் உரிமையாளர் சந்தானம் கூறியதாவது:ஏணியின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. முன்பு, கட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஏணிகளையே பயன்படுத்தி வந்தனர். அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ஏணிகள் வந்த பிறகு, கட்டை ஏணிகள் பயன்பாடு குறைந்துவிட்டது. இரண்டு அடி முதல், 150 அடி உயரம் வரை அலுமினிய ஏணிகள் விற்பனைக்கு உள்ளன.
பெரிய பெரிய கட்டடங்கள், சர்ச்கள், கோவில்களில் சுண்ணாம்பு மற்றும் கலர் அடிப்பதற்கு பெரிய ஏணிகள் பயன்படுகின்றன. அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏணிகள், மடக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.ஏணியின் பக்கவாட்டில், ஏணியை தாங்கி நிற்கும் வகையில் ஸ்டாண்ட் உள்ளதால், பெண்கள் பயப்பட வேண்டியதில்லை. அதேபோல், குழந்தைகளும் ஏணி மீது ஏற முடியும். ஏணி கீழே விழ வாய்ப்பே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்கு ஏற்ற ஏணிகள், 13 அடியில் இருந்து உள்ளன. அலுமினிய ஏணிகள், விவசாய பண்ணைக்கு மிகவும் உகந்தது. பாக்கு பறிப்போர் எளிதான முறையில், ஏணியில் ஏறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஏணிகள், தண்ணீரில் நனைந்தாலும், வெயிலில் காய்ந்தாலும் துருப்பிடிக்காது. எல்லா வேலைகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.ஏணி, பாரம் அதிகம் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகளின் மேல் ரேக்கில் உள்ள மாத்திரைகளை எடுப்பதற்கு, அலுமினிய ஏணிகள் பயன்படுகின்றன. இவ்வாறு சந்தானம் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)