வரி சேமிப்பிற்கான இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள்வரி சேமிப்பிற்கான இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள் ... நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் ...
சிறிய நகரங்களை குறி வைக்கும் துரித உணவு நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
01:31

புதுடில்லி:துரித உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள், அதிக அளவில் நுகர்வோரை ஈர்க்கும் சிறிய நகரங்களில், கால் பதிக்க திட்டமிட்டுள்ளன.அமைப்பு சார்ந்த துரித உணவுத் துறையின் சந்தை மதிப்பு 9,000 கோடி ரூபாயாக உள்ளது. இத்துறை, ஆண்டுக்கு 25 சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, டோமினோஸ் பிஸா, பிஸா ஹட், கே.எப்.சி, சப்வே போன்ற பல நிறுவனங்கள், சிறிய நகரங்களில் அவற்றின் வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன. இந்நகரங்களில், தற்போது, இந்நிறுவனங்களின் வர்த்தகம் 50 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது.இந்தியாவில், டோமினோஸ் பிஸா பிராண்டிற்கு பிரதான தனியுரிமை பெற்றுள்ள ஜுபிலன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனம், நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம், மகாராஷ்ட்ராவில் ஷீரடி போன்ற சிறிய நகரங்களில் பல உணவகங்களை சிறப்பாக நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்துஇந்நிறுவனம், தமிழகத்தில் மதுரை, கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கோட்டா, கேங்டாக், ஜபல்பூர் உள்ளிட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஓராண்டிற்குள் 75 புதிய உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.கே.எப்.சி., நிறுவனம் கோழி உணவு வகைகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
இதன் மொத்த வருவாயில், 25 சதவீதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து கிடைக்கிறது. பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்களில் இந்நிறுவனத்தின் சிக்கன் லாலிபப் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு அசைவப் பிரியர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது.இந்நிறுவனம், அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்களில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.சப்வே துரித உணவு நிறுவனம், அமெரிக்காவில் வேரூன்றிய பின்னர், கடந்த 2001ம் ஆண்டு, இந்தியாவில் கால் பதித்தது.
முதன் முதலாக டெல்லியில் உணவகத்தை தொடங்கிய இந்நிறுவனம், பத்து ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது, இந்நிறுவனம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், தனியுரிமை அடிப்படையில், மேலும் பல கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை தயாரித்து வழங்கும் இந்நிறுவனம், பீகார் தலைநகர் பாட்னாவில், அதன் முதல் கிளையை திறந்துள்ளது. நுகர்வோரின் வரவேற்பு காரணமாக, மேலும் பல நகரங்களில் உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.இத்தகைய துரித உணவகங்களின் சிறப்பான வளர்ச்சிக்கு, சுகாதாரமான முறையில் அவை வழங்கும் சுவையான, தரமான உணவுகளே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது அறிமுகப்படுத்தும் புதிய உணவு வகைகளும், வாடிக்கையாளர்களை ஈர்த்து, வர்த்தகத்தை உயர்த்த துணை புரிவதாக உள்ளன என, இத்துறையை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)