சிறிய நகரங்களை குறி வைக்கும் துரித உணவு நிறுவனங்கள்சிறிய நகரங்களை குறி வைக்கும் துரித உணவு நிறுவனங்கள் ... நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் நறுமணப் பொருள்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் அரிசி ஏற்றுமதி 50 லட்சம் டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
01:33

புதுடில்லி:நடப்பு ஆண்டில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 32 சதவீதம் வளர்ச்சி கண்டு, 50 லட்சம் டன்னாக உயரும் என, சர்வதேச உணவு தானியங்கள் குழு (ஐ.ஜி.சி) மதிப்பிட்டுள்ளது.இரண்டாவது இடம்:உலகளவில், அரிசி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்ற 2011ம் ஆண்டு, இந்தியா 38 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.ஜி.சி மதிப்பீடு செய்துள்ளது.
நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது. அதனால், அரிசி உற்பத்தி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, நாட்டின் அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் என ஐ.ஜி.சி., தெரிவித்துள்ளது.
அரிசி உற்பத்தி உயரும் என்பதால், சென்ற 2011ம் ஆண்டு செப்டம்பர் முதல், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஒரு டன் அரிசிக்கான குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை 900 டாலராக நிர்ணயித்தது. இதன் காரணமாகவும், நாட்டின் அரிசி ஏற்றுமதி, உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2011-12ம் பயிர் பருவத்தில், இந்தியா 10.20 கோடி டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை போன்று, பாகிஸ்தானும் நடப்பாண்டு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு, பாகிஸ்தான் நாட்டின் அரிசி ஏற்றுமதி, 32 சதவீதம் உயர்ந்து 28 லட்சம் டன்னில் இருந்து 37 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நாடு, அரிசி ஏற்றுமதிக்கு குறைந்த பட்ச ஏற்றுமதி விலை எதையும் நிர்ணயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு காலண்டர் ஆண்டில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளைத் தவிர அமெரிக்கா, தாய்லாந்து, வியட்னாம் நாடுகளின் அரிசி ஏற்றுமதி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்து:நடப்பாண்டில், தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதி 1.05 கோடி டன்னில் இருந்து 72 லட்சம் டன்னாக குறையும் என தெரிகிறது. அது போன்று, வியட்னாம் நாட்டின் அரிசி ஏற்றுமதி 71 லட்சம் டன்னில் இருந்து 65 லட்சம் டன்னாகவும், அமெரிக்காவின் அரிசி ஏற்றுமதி 33 லட்சம் டன்னில் இருந்து 31 லட்சம் டன்னாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஐந்து நாடுகள் நீங்கலாக, இதர நாடுகளின் அரிசி ஏற்றுமதி 68 லட்சம் டன்னில் இருந்து 63 லட்சம் டன்னாக குறையும் என, ஐ.ஜி.சி மதிப்பிட்டுள்ளது.
தூரக் கிழக்கு ஆசிய நாடுகளின் அரிசி இறக்குமதி குறைந்துள்ளதால், உலக நாடுகளில் அரிசி ஏற்றுமதி, 3.41 கோடி டன்னில் இருந்து 3.15 கோடி டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், நடப்பு 2011-12ம் பயிர் பருவத்தில், ஆசியாவில், குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நெல் உற்பத்தி உயரும் என்பதால், சர்வதேச நெல் உற்பத்தி 45.90 கோடி டன்னாக அதிகரிக்கும் என தெரிகிறது.
அரிசி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள வியட்னாம், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, சீனா ஆகிய ஐந்து நாடுகளின் அரிசி கையிருப்பு, சாதனை அளவாக 10 சதவீதம் உயர்ந்து 3.19 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, தாய்லாந்து நாடுகளின் அரிசி கையிருப்பு அதிகரித்துள்ளதால் இது சாத்தியமாகும் என, ஐ.ஜி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)